சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். நோய் தடுப்பு, வெள்ள அபாயம், மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது, உணவு வழங்குவது குறித்து காணொலிக் காட்சி மூலம் துறை செயலர்களுடன் ஆலோசித்து வருகிறார்.